Monday, April 27, 2009

கனல் கண்ணனை மிஞ்சும் கருணாநிதி !

இன்னிக்கு ஆபீஸ் உள்ள வரும்போதே சாமி கேட்டான் "என்ன மச்சான், உங்காளு பீச்சாண்ட உக்காந்துட்டு காமெடி பண்ணிட்டு இருக்காரு". எனக்கு தலையும் புரியல வாலும் புரியல. என்னடா மேட்டர்னு கேட்டேன். நீயே அந்த கொடுமைய நெட்ல பாருன்னு சொல்லிட்டு அவன் போய்ட்டான். ஓபன் பண்ணா....... "அப்பிடியே ஷாக்காயிட்டேன்"..... கனல் கண்ணன் அடிக்கிற ஸ்டண்ட் எல்லாத்தையும் தூக்கி சாப்பிடற மாதிரி அடிச்சாரே ஒரு ஸ்டண்ட். அப்படியே தூள் படம் பாக்கிற மாதிரியே இருந்தது.

தமிழர் பாதுகாப்பு பேரவை பந்த் நடத்துனா அது சட்ட விரோதம். ஆனா இவர் நடத்துவாராம்....பத்து பெண்கள் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்தா இவரு போலீஸ் விட்டு அரெஸ்ட் பண்ண சொல்லுவாராம்....ஆனா இவரு மட்டும் யாருக்குமே சொல்லாம (கார் ஓட்டுன டிரைவருக்கு கூட) பீச்ல உக்காந்து உண்ணாவிரதம் ஓங்குக அப்படின்னா போலீஸ் முழு பாதுகாப்பு குடுக்குமாம்.. இலங்கை தமிழர்களை காப்பாத்த முடியலன்னா ராஜினாமா பண்ணுங்கன்னு "அம்மையார்" கேட்டா, ராஜினாமா பண்ணா சண்டைய நிறுத்திடுவாங்களான்னு கேட்டாரு...இப்போ பந்த் நடத்துன உடனே சண்ட நின்னுடுச்சா ...

அடுத்தது உண்ணாவிரதம்.... இலங்கையில் சண்டை நிறுத்தம் வரும் வரை யார் என்ன சொன்னாலும் (ஏன்னா அன்பு உடன்பிறப்புகளின் வேண்டுகோளுக்கிணங்க, அல்லது பேராசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க அப்படின்னு ஏதாவது கதை சொல்லுவாரு) காலவரையற்ற (அல்லது சாகும் வரை) உண்ணாவிரதம் இருந்தாருன்னா இவரு சொல்லுறதை நம்பறேன்பா....அதுவும் கஷ்டப்பட்டு...இல்ல NDTV ல இருந்து பேட்டி எடுக்குறதுக்கு பதிலா AXN ல இருந்து இவர பேட்டி எடுக்க வருவாங்க. பெஸ்ட் ஸ்டண்ட் மாஸ்டர் அவார்ட் குடுக்க...........

போங்கடா நீங்களும் ஒங்க அரசியலும்.....

Saturday, April 25, 2009

என் இனிய பிளாக்கர்களே !

தமிழ் கூறும் நல் உள்ளங்களுக்கு என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று முதல் என் நெஞ்சுக்கு மிக அருகில் உள்ளதை யார் மனமும் "அதிகமாக" வேதனைப்படாத அளவில் கூற முயற்சிக்கிறேன். தவறு ஏதேனும் இருந்தால் சுட்டுவதற்கும், குட்டுவதற்கும் அனைவரையும் உரிமையுடன் அழைக்கிறேன். இன்றைய பொழுது இனிதே அமைய அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.